Saturday, March 12, 2016

நொய்டாவில் ஆலங்கட்டி மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நொய்டாவில் இன்று காலை திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் பெரும் அவத்தைக்குள்ளாகினர்.
நேற்று மாலை பெய்த கனமழையை அடுத்து, இன்று காலை 9 மணியில் இருந்து கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் தொடர்ந்து ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.


அங்குள்ள பூங்கா, கார்களின் மீது சிறிய பந்துகள் போல் ஆலங்கட்டி படந்திருந்தது மிகவும் அழகாக காட்சியளித்தன.

இதனால், வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் வெளியில் வரமுடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். அங்கு காலநிலை 29 டிகிரி செல்லியஸ் நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment