தமிழகம் உட்பட ஒன்பது மத்திய
பல்கலைகளுக்கான, க்யூசெட் (CUCET) நுழைவுத் தேர்வுக்கு, மார்ச் 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்பது மத்திய
பல்கலைகளில் உள்ள பாடப்பிரிவுகளின் இளங்கலை மற்றும் மேற்படிப்புகளில் சேர க்யூசெட்
என்ற மத்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
ராஜஸ்தான் மத்திய பல்கலை வரும் கல்வி
ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை, நடத்துகிறது. இதற்கு மார்ச் 14 முதல், ஏப்ரல் 15 வரை விண்ணப்பிக்கலாம்/மே, 21, 22ல் தேர்வுகள் நடக்கும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான்,
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலை
உட்பட நாடு முழுவதும் உள்ள ஒன்பது பல்கலைகளின் பாடப்பிரிவுகளில் சேர
முடியும்.கூடுதல் தகவல்களுக்கு http://cucet16.co.in/WebPage/Home.aspx என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment